பிரதிஷ்டை தினத்தை ஒட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, சிறப்பு வழிபாட்டிற்காகத் திறக்கப்பட்டுள்ளது.
மண்டல மற்றும் மகர விளக்குப் பூஜை காலங்கள் தவிர மாதாந்திர வழிபாட்டுக்காகவும், முக்கிய நாட்களிலும் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுவது வழக்கம்.
அதன்படி இன்று நடைபெறும் பிரதிஷ்டை தினத்தையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுச் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை அதிகாலை 5 மணிக்குத் திறந்து வைத்த நிலையில், சிறப்பு வழிபாடுகள் நிறைவடைந்த பின் இரவு 10.30 மணிக்கு நடை மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனி மாத பூஜைகளுக்காக வரும் 14-ம் தேதி மீண்டும் கோயில் நடை திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.