குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள பாலிதானா நகரம் இறைச்சி, முட்டை உட்பட அனைத்து வகையிலான அசைவ உணவுகளைத் தடை செய்து உலகின் முதல் சைவ நகரமாக உருவெடுத்துள்ளது.
2014-ம் ஆண்டு முதல் சமண துறவிகள் தொடர் போராட்டம் மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது அந்த நகரத்தில் அசைவ உணவுகள் முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த முடிவு சமண மதத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகவும், அவர்களின் மத நம்பிக்கைக்கு மரியாதை அளிப்பதாகவும் அமைந்திருக்கிறது.