பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சர்ச்சையாக பேசிய அமைச்சர் மனோ தங்கராஜுக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், பெங்களூரு நிகழ்வு பற்றிய கேள்விக்கு, மக்கள் கோயில் திருவிழாக்களுக்கு செல்லக்கூடாது என மனோ தங்கராஜ் பதில் அளித்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்
கோவில் சொத்துகளை சுரண்டும் கூட்டம், மக்கள் கோயில் திருவிழாவுக்கு செல்வது நாகரிகம் இல்லை என்று கூறுவதா? என கேள்வி எழுப்பியுள்ள அவர்,
தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடும் நிலையில் அமைச்சர் மனோ தங்கராஜ் பகுத்தறிவு பேசுவதாக விமர்சித்துள்ளார்.
இண்டி கூட்டணிக் கட்சியின் நிர்வாகத் தோல்வியை மறைக்க இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள அண்ணாமலை, கொத்தடிமைகளைக் கூட்டி கூட்டம் போடும் திமுக தலைவரிடம் இவ்வாறு கூறுவாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.