வங்கிகளின் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தைத் தொடர்ந்து 3வது முறையாகக் குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
நாட்டின் பல்வேறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி குறுகிய கால கடன்களை வழங்கி அதற்கான வட்டியைப் பெறுகிறது.
இந்த ரெப்போ வட்டி விகிதத்தை ஏற்கனவே 2 முறை குறைத்த ரிசர்வ் வங்கி 3வது முறையாகவும் குறைத்துள்ளது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா வீடியோ மூலம் வெளியிட்ட அறிவிப்பில், ரெப்போ வட்டி விகிதம் பூஜ்யம் புள்ளி ஐந்து சதவீதம் குறைக்கப்பட்டு, வட்டி விகிதம் 5.50 சதவீதமாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு அறிவிப்பு மூலம் வீடு, வாகன கடன்கள் மீதான வட்டி குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான அறிவிப்பை வங்கிகள் விரைவில் வெளியிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக 0.25 விழுக்காடு வட்டி விகிதத்தைக் குறைக்கும் ரிசர்வ் வங்கி இம்முறை 0.50 விழுக்காட்டைக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது, கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.