சிவகங்கையில் 12-ம் வகுப்பைத் தொடர பள்ளி தலைமையாசிரியர் மறுப்பு தெரிவித்ததால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் முதன்மை கல்வி அலுவலரைச் சந்தித்து புகார் மனு அளித்தனர்.
மானாமதுரை பகுதியைச் சேர்ந்த சுமன், சுபம் ஆகிய இருவரும் அப்பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், மாணவர்கள் கடந்தாண்டு வகுப்பறையில் உள்ள நாற்காலிகளை உடைத்ததாகவும், போதைப் பொருள் பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து காவலர்களை வைத்து மாணவர்கள் பள்ளி நிர்வாகம் கண்டித்துள்ளது. இதுகுறித்து மனித உரிமை ஆணையத்தில் மாணவர்கள் புகாரளித்ததால், அதற்குப் பழிவாங்கும் நோக்கத்துடன் மாணவர்களை 12-ம் வகுப்புக்கு அனுமதிக்காமல் அவர்களது சான்றிதழ்களைத் தலைமையாசிரியர் திருப்பி அளித்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரைச் சந்தித்து புகார் மனு அளித்தனர்.