நீட் மறுதேர்வு நடத்தக் கோரிய மனுக்களைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மே 4ஆம் தேதி இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வின்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் தேர்வு எழுத முடியவில்லை எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் 16 மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நீட் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நீட் தேர்வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும்,
பெரும்பாலான மாணவர்கள் கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளதால் மறுதேர்வு நடத்த முடியாது எனவும் தேசிய தேர்வு முகமை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனை அடுத்து இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி சி.குமரப்பன், மத்திய அரசு நடத்திய விசாரணையில் எடுக்கப்பட்டுள்ள முடிவு நியாயமானது என்றும், 22 லட்சம் மாணவர்கள் நீட்தேர்வு எழுதியுள்ள நிலையில், மறுதேர்வு நடத்த உத்தரவிட்டால் அது தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும் எனக்கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.