நீலகிரி மாவட்டம் உதகையில் பீன்ஸ் கிலோவுக்கு 150 ரூபாய் வரை விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கேரட், பீன்ஸ் உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் பயிரிடப்பட்டு விற்பனைக்காகத் தமிழகம் முழுவதும் கொண்டு செல்லப்படுகின்றன.
இந்நிலையில் 80-ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த பீன்ஸ் தற்போது 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.