திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வெண்ணாற்றில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரை கொடிகளை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் வரை வெண்ணாற்றில் ஆகாயத் தாமரை கொடிகள் பரவி கிடப்பதால், விவசாய நிலங்களுக்குக் குறைவான தண்ணீரைச் செல்லும் நிலை உள்ளது.
இந்த நிலையில், ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளதால், அதற்கு முன்பாக ஆகாயத் தாமரை கொடிகளை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.