விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்குச் சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திண்டிவனம் அடுத்த பெரப்பேரி கிராமத்தைச் சேர்ந்த தியாகராஜன், காய்ச்சல் காரணமாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது சோதனையில் உறுதியானது.
இதையடுத்து தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காசநோய் போன்ற இணை நோய்கள் தியாகராஜனுக்கு இருந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.