கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், காய்ச்சல், இருமல், உடல் வலி இருக்கும் கர்ப்பிணிகள் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமெனவும், கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள பகுதிகளுக்குச் செல்வதைக் கர்ப்பிணிகள் சில நாட்களுக்குத் தவிர்க்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்றாலும் பாதுகாப்பிற்காகக் கர்ப்பிணிகள் முகக்கவசம் அணியலாம் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் படிப்படியாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கர்ப்பிணிகளுக்கு சுகாதாரத்துறை அறிவுரை வழங்கியுள்ளது.