"போராட்டம் வெடிக்கும்" : புதிய ஹைடெக் பார் திறக்க எதிர்ப்பு!
Jan 14, 2026, 02:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

“போராட்டம் வெடிக்கும்” : புதிய ஹைடெக் பார் திறக்க எதிர்ப்பு!

Murugesan M by Murugesan M
Jun 6, 2025, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலத்தில் இயங்கி வரும் மதுபானக் கடைகளை மூடக்கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில் புதியதாக ஹைடெக் பாரை திறக்க திட்டமிட்டிருப்பதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. ஒருபுறம் மதுக்கடைகளை மூடுவது போல மூடி, மறுபுறம் மனமகிழ் மன்றங்களைத் திறந்து வருவதாகவும் தமிழக அரசு மீது புகார் எழுந்திருக்கிறது.

சேலம் சங்ககிரி பிரதான சாலையில் மாநகர காவல் ஆணையர் அலுவலகமும், நெத்திமேடு பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகமும் இயங்கி வருகிறது. இந்த நெத்திமேடு பகுதியிலிருந்து கொண்டாலம்பட்டி ரவுண்டானா பகுதி வரை மட்டும் ஏற்கனவே ஐந்து டாஸ்மாக் பார்கள் இயங்கி வரும் நிலையில் மேலும் ஒரு டாஸ்மாக் கடையைத் திறக்க முடிவு செய்திருப்பது அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பிட்ட பகுதியில் ஏற்கனவே இயங்கி வரும் மதுபானக்கடைகளால் அருகில் இருக்கும் கோயில்களுக்கு வரும் பக்தர்களும், , மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.  இந்த கடைகளை அகற்ற வலியுறுத்தி வரும் நிலையில், தற்போது குமர கவுண்டர் தெருவில் ஹைடெக் டாஸ்மாக் பார் திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

ஏற்கனவே இயங்கிவரும் மதுபானக்கடைகளால் மது அருந்திவிட்டு அலப்பறை செய்யும் மதுப்பிரியர்களால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர்கள் தொடங்கி பல்வேறு தரப்பினர் இன்னல்களுக்கு உள்ளாகி வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு பார் திறந்தால் போராட்டம் வெடிக்கும் எனவும் அப்பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர்.

டாஸ்மாக் கடைகளை படிப்படியாகக் குறைத்து மதுவிலக்கை அமல்படுத்துவோம் என வாக்குறுதியளித்த திமுக, ஒருபுறம் மதுக்கடைகளை மூடுவது போல மூடி, மறுபுறம் பார் வசதியுள்ள மனமகிழ் மன்றங்களை அதிகளவில் திறந்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே இருக்கும் மதுபானக்கடைகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை மறுக்கப்படும் போதெல்லாம் மக்கள் போராட்டத்தின் மூலம் அவைகள் மூடப்பட்ட வரலாறு உண்டு.   எதிர்ப்பை மீறி ஹைடெக் பார் திறக்கப்பட்டால் அதற்கான எதிர்வினையை மாவட்ட நிர்வாகமும், மதுவிலக்குத்துறையும் சந்திக்க நேரிடும் எனவும் அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: சங்ககிரி"Protest will erupt": Opposition to opening of new hi-tech barபுதிய ஹைடெக் பார் திறக்க எதிர்ப்புபோராட்டம் வெடிக்கும்சேலம்tasmac
ShareTweetSendShare
Previous Post

ஆக. 3ம் தேதி நீட் முதுகலை நுழைவு தேர்வு : உச்சநீதிமன்றம் அனுமதி!

Next Post

அரிய கனிமங்கள் ஏற்றுமதியை நிறுத்திய சீனா – உலக நாடுகள் அதிர்ச்சி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies