"போராட்டம் வெடிக்கும்" : புதிய ஹைடெக் பார் திறக்க எதிர்ப்பு!
Oct 26, 2025, 04:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

“போராட்டம் வெடிக்கும்” : புதிய ஹைடெக் பார் திறக்க எதிர்ப்பு!

Web Desk by Web Desk
Jun 6, 2025, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலத்தில் இயங்கி வரும் மதுபானக் கடைகளை மூடக்கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில் புதியதாக ஹைடெக் பாரை திறக்க திட்டமிட்டிருப்பதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. ஒருபுறம் மதுக்கடைகளை மூடுவது போல மூடி, மறுபுறம் மனமகிழ் மன்றங்களைத் திறந்து வருவதாகவும் தமிழக அரசு மீது புகார் எழுந்திருக்கிறது.

சேலம் சங்ககிரி பிரதான சாலையில் மாநகர காவல் ஆணையர் அலுவலகமும், நெத்திமேடு பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகமும் இயங்கி வருகிறது. இந்த நெத்திமேடு பகுதியிலிருந்து கொண்டாலம்பட்டி ரவுண்டானா பகுதி வரை மட்டும் ஏற்கனவே ஐந்து டாஸ்மாக் பார்கள் இயங்கி வரும் நிலையில் மேலும் ஒரு டாஸ்மாக் கடையைத் திறக்க முடிவு செய்திருப்பது அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பிட்ட பகுதியில் ஏற்கனவே இயங்கி வரும் மதுபானக்கடைகளால் அருகில் இருக்கும் கோயில்களுக்கு வரும் பக்தர்களும், , மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.  இந்த கடைகளை அகற்ற வலியுறுத்தி வரும் நிலையில், தற்போது குமர கவுண்டர் தெருவில் ஹைடெக் டாஸ்மாக் பார் திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

ஏற்கனவே இயங்கிவரும் மதுபானக்கடைகளால் மது அருந்திவிட்டு அலப்பறை செய்யும் மதுப்பிரியர்களால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர்கள் தொடங்கி பல்வேறு தரப்பினர் இன்னல்களுக்கு உள்ளாகி வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு பார் திறந்தால் போராட்டம் வெடிக்கும் எனவும் அப்பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர்.

டாஸ்மாக் கடைகளை படிப்படியாகக் குறைத்து மதுவிலக்கை அமல்படுத்துவோம் என வாக்குறுதியளித்த திமுக, ஒருபுறம் மதுக்கடைகளை மூடுவது போல மூடி, மறுபுறம் பார் வசதியுள்ள மனமகிழ் மன்றங்களை அதிகளவில் திறந்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே இருக்கும் மதுபானக்கடைகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை மறுக்கப்படும் போதெல்லாம் மக்கள் போராட்டத்தின் மூலம் அவைகள் மூடப்பட்ட வரலாறு உண்டு.   எதிர்ப்பை மீறி ஹைடெக் பார் திறக்கப்பட்டால் அதற்கான எதிர்வினையை மாவட்ட நிர்வாகமும், மதுவிலக்குத்துறையும் சந்திக்க நேரிடும் எனவும் அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: புதிய ஹைடெக் பார் திறக்க எதிர்ப்புபோராட்டம் வெடிக்கும்சேலம்tasmacசங்ககிரி"Protest will erupt": Opposition to opening of new hi-tech bar
ShareTweetSendShare
Previous Post

ஆக. 3ம் தேதி நீட் முதுகலை நுழைவு தேர்வு : உச்சநீதிமன்றம் அனுமதி!

Next Post

அரிய கனிமங்கள் ஏற்றுமதியை நிறுத்திய சீனா – உலக நாடுகள் அதிர்ச்சி!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies