"போராட்டம் வெடிக்கும்" : புதிய ஹைடெக் பார் திறக்க எதிர்ப்பு!
Jun 15, 2026, 02:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

“போராட்டம் வெடிக்கும்” : புதிய ஹைடெக் பார் திறக்க எதிர்ப்பு!

Murugesan M by Murugesan M
Jun 6, 2025, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலத்தில் இயங்கி வரும் மதுபானக் கடைகளை மூடக்கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில் புதியதாக ஹைடெக் பாரை திறக்க திட்டமிட்டிருப்பதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. ஒருபுறம் மதுக்கடைகளை மூடுவது போல மூடி, மறுபுறம் மனமகிழ் மன்றங்களைத் திறந்து வருவதாகவும் தமிழக அரசு மீது புகார் எழுந்திருக்கிறது.

சேலம் சங்ககிரி பிரதான சாலையில் மாநகர காவல் ஆணையர் அலுவலகமும், நெத்திமேடு பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகமும் இயங்கி வருகிறது. இந்த நெத்திமேடு பகுதியிலிருந்து கொண்டாலம்பட்டி ரவுண்டானா பகுதி வரை மட்டும் ஏற்கனவே ஐந்து டாஸ்மாக் பார்கள் இயங்கி வரும் நிலையில் மேலும் ஒரு டாஸ்மாக் கடையைத் திறக்க முடிவு செய்திருப்பது அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பிட்ட பகுதியில் ஏற்கனவே இயங்கி வரும் மதுபானக்கடைகளால் அருகில் இருக்கும் கோயில்களுக்கு வரும் பக்தர்களும், , மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.  இந்த கடைகளை அகற்ற வலியுறுத்தி வரும் நிலையில், தற்போது குமர கவுண்டர் தெருவில் ஹைடெக் டாஸ்மாக் பார் திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

ஏற்கனவே இயங்கிவரும் மதுபானக்கடைகளால் மது அருந்திவிட்டு அலப்பறை செய்யும் மதுப்பிரியர்களால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர்கள் தொடங்கி பல்வேறு தரப்பினர் இன்னல்களுக்கு உள்ளாகி வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு பார் திறந்தால் போராட்டம் வெடிக்கும் எனவும் அப்பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர்.

டாஸ்மாக் கடைகளை படிப்படியாகக் குறைத்து மதுவிலக்கை அமல்படுத்துவோம் என வாக்குறுதியளித்த திமுக, ஒருபுறம் மதுக்கடைகளை மூடுவது போல மூடி, மறுபுறம் பார் வசதியுள்ள மனமகிழ் மன்றங்களை அதிகளவில் திறந்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே இருக்கும் மதுபானக்கடைகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை மறுக்கப்படும் போதெல்லாம் மக்கள் போராட்டத்தின் மூலம் அவைகள் மூடப்பட்ட வரலாறு உண்டு.   எதிர்ப்பை மீறி ஹைடெக் பார் திறக்கப்பட்டால் அதற்கான எதிர்வினையை மாவட்ட நிர்வாகமும், மதுவிலக்குத்துறையும் சந்திக்க நேரிடும் எனவும் அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: புதிய ஹைடெக் பார் திறக்க எதிர்ப்புபோராட்டம் வெடிக்கும்சேலம்tasmacசங்ககிரி"Protest will erupt": Opposition to opening of new hi-tech bar
ShareTweetSendShare
Previous Post

ஆக. 3ம் தேதி நீட் முதுகலை நுழைவு தேர்வு : உச்சநீதிமன்றம் அனுமதி!

Next Post

அரிய கனிமங்கள் ஏற்றுமதியை நிறுத்திய சீனா – உலக நாடுகள் அதிர்ச்சி!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

Load More

அண்மைச் செய்திகள்

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies