நாகையில் சுனாமியின் போது கட்டப்பட்ட வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் காயம் அடைந்த தம்பதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் சௌந்தர்ராஜன். இவருக்கு கடந்த 2007 ஆம் ஆண்டு சுனாமியால் வீட்டை இழந்தவர்களுக்கு கட்டிக் கொடுக்கப்பட்ட சுனாமி நிரந்தர வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் சௌந்தர்ராஜன் மற்றும் அவரது மனைவி வசந்தி ஆகியோர் உணவு அருந்திவிட்டு வீட்டில் துங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பலத்த சத்தத்துடன் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விழுந்தது.
இதில் இருவரும் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கட்டிடம் பழுது பார்க்கும் பணியை ஊரக வளர்ச்சி அதிகாரிகள் செயல்படுத்தாததால் இது போன்ற விபத்துக்கள் தொடர்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.