கன்னியாகுமரியில் உள்ள அரச குளம் பாலமுருகன் கோயில் வைகாசி விசாக திருவிழா மற்றும் குடமுழுக்கை ஒட்டி பால்குட பவனி ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
அரசகுளம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோயில் 12வது ஆண்டு வைகாசி விசாக திருவிழா மற்றும் குடமுழுக்கு கடந்த 30 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 9-ஆம் நாளான இன்று பால்குட ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது.
கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோயிலிலிருந்து துவங்கிய இந்த ஊர்வலத்தில் விரதமிருந்த ஏராளமான பக்தர்கள் பால், சந்தனம், குங்குமம் உள்ளிட்டவற்றைத் தலையில் சுமந்து மேள தாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாகக் கோயிலுக்குச் சென்றனர்.
மேலும் அலகு குத்தியும், மயில் காவடி, பறக்கும் காவடி எடுத்தும், அந்தரத்தில் பறந்தபடி பக்தர்கள் ஊர்வலமாகச் சென்று முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.