மீன்பிடித் தடைக்காலம் முடிவதற்குள் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீன்பிடி பகுதிகளில் தயாராகி உள்ள சுமார் 800 நாட்டுப் படகுகளை மீன்வளத்துறை உதவி இயக்குநர் ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முழுவதும் 2 மாதங்களாக அமலில் உள்ள மீன்பிடித் தடைக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதன் காரணமாக மீன்பிடி படகுகள், உயர் எஞ்சின் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகள் மற்றும் விசைப் படகுகள் கடலுக்குச் செல்லத் தயாராகி வருகின்றன.
இதையொட்டி மண்டபம், சீனியப்பா தர்கா, வேதாளை உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் உள்ள நாட்டுப் படகுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. எஞ்சின் பொருத்தப்பட்டவை மற்றும் எஞ்சின் இல்லாதவை, படகுகளின் பதிவுச் சான்று, மீன்பிடி உரிமம், காப்பீட்டுச் சான்று, மானிய டீசல் அட்டை ஆகியவற்றை மீன்வளத் துறை உதவி இயக்குநர் சிவக்குமார் ஆய்வு செய்தார்.