பிரதமர் மோடியின் ஆட்சி 12 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், தேசத்தைக் கட்டியெழுப்ப மாற்றத்தை ஏற்படுத்தும் சகாப்தத்திற்கு தலை வணங்குவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், பிரதமர் மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பதில் இருந்து அமைப்புகளை எளிமைப்படுத்துவது வரை, இந்த பயணம் மக்கள் முதன்மையான நிர்வாகத்தின் உண்மையான உணர்வை பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
அரசாங்கம் அனைவரின் நல்வாழ்விற்கும், குறிப்பாக ஏழைகளின் நல்வாழ்விற்கும் – ஒவ்வொரு குடிமகனுக்கும் கண்ணியம், வாய்ப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தேசத்தைக் கட்டியெழுப்ப இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் சகாப்தத்திற்கு தலை வணங்குகிறோம் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.