தமிழகத்தில் உள்ள கோயில்களில் இந்து அறநிலையத்துறையினர் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பதற்கு இந்து முன்னணி மாநிலச் செயலாளர் மனோகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுரையில் இந்து முன்னணி சார்பில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டிற்கு எடுத்துச் செல்லும் வேலுக்குத் திருத்தணி சுப்பிரமணிய சாமி கோயிலில் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.
இந்நிகழ்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மனோகரன், கோயில்களில் கணக்கு பார்க்க வந்தவர்கள்தான் அறநிலைத் துறை என்றும் நாட்டாமை செய்ய வரவில்லை என்றும் விமர்சித்தார்.