ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் எல்லை பாதுகாப்புப் படை சார்பில் நாய்களுக்கான பயிற்சி மையம் திறக்கப்பட்டுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் தீவிரவாத ஊடுருவல் மற்றும் வெடிகுண்டு ஆகியவற்றைக் கண்டறிய எல்லை பாதுகாப்புப் படையில் நாய்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் எல்லை பாதுகாப்புப் படையில் சேர்க்கப்பட்டுள்ள நாய்களுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில் பிகானர் பகுதியில் நாய்கள் பயிற்சி மையம் திறக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படை வீரர்களுடன் நாய்கள் தீவிர பயிற்சியில் ஈடுபடும் வீடியோ வெளியாகி உள்ளது.