மதுரை முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு, சுவாமிமலை கோயிலில் வேல் வழிபாடு நடைபெற்றது.
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில், அறுபடை கோயில்களின் கண்காட்சி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் சார்பில் வேல் வழிபாடு நடைபெற்றது.
இந்து முன்னணி மாநிலச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற வேல் வழிபாட்டில், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.