சுகாதார சீர்கேட்டின் உச்சம் : நோய்களை உருவாக்கும் கோயம்பேடு சந்தை!
Jan 17, 2026, 04:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சுகாதார சீர்கேட்டின் உச்சம் : நோய்களை உருவாக்கும் கோயம்பேடு சந்தை!

Murugesan M by Murugesan M
Jun 10, 2025, 07:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை கோயம்பேடு சந்தையில் குவிந்து கிடக்கும் அழுகிய பழங்கள் மற்றும் காய்கறிகளால் சுகாதார சீர்கேடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  நாள்தோறும் லட்சக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் கோயம்பேடு சந்தையில் கொட்டப்படும் கழிவுகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னையின் தனித்துவமான அடையாளங்களில் ஒன்று தான் இந்த கோயம்பேடு காய், கனி மற்றும் மலர் அங்காடி. சென்னை மட்டுமல்ல அதன் புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த சிறு,குறு வணிகர்களின் வியாபாரச் சந்தையாகவும் இந்த கோயம்பேடு சந்தை விளங்கி வருகிறது.

295 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் இந்த கோயம்பேடு சந்தையில் சுமார் 4 ஆயிரம் கடைகள் இயங்கி வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு சுமார் 35 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறும் ஆசியாவின் மிகப்பெரிய சந்தையாகவும் திகழ்கிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் இந்த சந்தையில் கொட்டப்பட்டிருக்கும் அழுகிய பழங்களும், காய்கறிகளும் சுகாதார சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

விற்பனையாகாத பழங்களும், காய்கறிகளும் அழுகிய நிலையில் கோயம்பேடு வளாகத்திற்குள்ளாகவே கொட்டப்படுவதால் அதிகளவு துர்நாற்றம் வீசுவதோடு, அதன் மூலம் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய சந்தையாகக் கருதப்படும் கோயம்பேடு சந்தையில் நிலவும் இந்த சுகாதார சீர்கேடு, அங்கு வரும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் சுகாதாரத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

அழுகிய பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கொட்டுவதற்குத் தனி இடம் ஒதுக்குவதோடு, அவ்வாறு கொட்டப்படும் பழங்களையும், காய்கறிகளையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்ற வியாபாரிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படாமலேயே இருக்கிறது. சுகாதார சீர்கேடுகள் நிறைந்த கோயம்பேடு சந்தைக்கு வருவதற்கே பொதுமக்கள் அச்சப்படும் அளவிற்கான சூழலும் ஏற்பட்டுள்ளது.

நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் கோயம்பேடு சந்தையை முறையாகப் பராமரிக்கத் தவறிவிட்டதாக சிஎம்டிஏ நிர்வாகத்தின் மீது புகார் எழுந்திருக்கிறது. தமிழகத்தில் உருமாறிய கொரோனா தொற்று ஒருபுறம் பரவிக் கொண்டிருக்கும் நிலையில், மறுபுறம் கோயம்பேடு சந்தையில் கொசுக்களால் உருவாகும் டெங்கு, மலேரியா காய்ச்சல் ஏற்படும் அசாதாரண சூழலும் உருவாகியுள்ளது.

எனவே பொதுமக்கள் பாதிக்கப்படுவதற்கு முன்பாகவே உரிய நடவடிக்கை மேற்கொண்டு கழிவுகளை உடனுக்குடன் அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை சிஎம்டிஏ நிர்வாகமும் தமிழக அரசும் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை  எழுந்துள்ளது.

Tags: The height of health deterioration: Koyambedu market that causes diseasesகோயம்பேடு சந்தைசென்னை கோயம்பேடு சந்தை
ShareTweetSendShare
Previous Post

தாம்பரத்தில் பாலியல் அத்துமீறல் நடந்த அரசு விடுதியில் பாதுகாப்பு குறைபாடு : காவல்துறை

Next Post

சிறு, குறு நிறுவனங்கள் வளர்ச்சி : மத்திய அரசின் தொழில்நுட்ப மையங்களுக்கு வரவேற்பு!

Related News

அரசு வேலையில் மாடுபிடி வீரர்களுக்கு முன்னுரிமை – முதலமைச்சர் ஸ்டாலின்

ஆட்டம், பாட்டத்துடன் களைகட்டிய ஞானவேல் முருகன் ரதயாத்திரை ஊர்வலம்!

திருப்பரங்குன்ற விவகாரத்தில் உயிரிழந்த பூர்ண சந்திரனுக்கு மலை மீது மோட்ச தீபம் ஏற்றிய கிராம மக்கள்!

நெருங்கும் சட்டமன்ற தேர்தல் – அசத்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட EPS!

ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்ய வேண்டும்! – முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

போட்டி தாமதமாக தொடங்கியதால் 100 காளைகள் அவிழ்க்கப்படாத அவலம்!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி திமுக MLA இருவரையும் அமர வைத்து சாரட் வண்டி ஓட்டிய மாவட்ட ஆட்சியர்

திரௌபதி இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் இல்லை -இயக்குநர் மோகன்ஜி

“மும்பையில் டிரிபிள் என்ஜின் சர்க்கார் அமைந்துள்ளது” – பாஜக எம்.பி.தேஜஸ்வி சூர்யா!

“மலை டா! அண்ணாமலைடா இது..!” – அண்ணாமலை பிரசாரம் – பாஜக வேட்பாளர் அமோக வெற்றி!

“ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரேவின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது” – முதலமைச்சர் தேவேந்திர ஃபட்நாவிஸ்!

மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் பாஜக வெற்றி: வாக்களித்த மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி!

மும்பை மாநகராட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி – தாக்கரே குடும்பத்தினரின் ஆதிக்கம் முடிவுற்றது!

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி, வீரர்களின் உறுதிமொழியுடன் தொடங்கியது!

கோலாகலமாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி – கம்பீரமாக நடந்து வந்த காளை – திகைத்து நின்ற வீரர்கள்!

ஈரானில் மிகப்பெரிய இனப்படுகொலை – ஈரானில் மிகப்பெரிய இனப்படுகொலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies