சுகாதார சீர்கேட்டின் உச்சம் : நோய்களை உருவாக்கும் கோயம்பேடு சந்தை!
Jul 22, 2026, 11:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சுகாதார சீர்கேட்டின் உச்சம் : நோய்களை உருவாக்கும் கோயம்பேடு சந்தை!

Murugesan M by Murugesan M
Jun 10, 2025, 07:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை கோயம்பேடு சந்தையில் குவிந்து கிடக்கும் அழுகிய பழங்கள் மற்றும் காய்கறிகளால் சுகாதார சீர்கேடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  நாள்தோறும் லட்சக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் கோயம்பேடு சந்தையில் கொட்டப்படும் கழிவுகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னையின் தனித்துவமான அடையாளங்களில் ஒன்று தான் இந்த கோயம்பேடு காய், கனி மற்றும் மலர் அங்காடி. சென்னை மட்டுமல்ல அதன் புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த சிறு,குறு வணிகர்களின் வியாபாரச் சந்தையாகவும் இந்த கோயம்பேடு சந்தை விளங்கி வருகிறது.

295 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் இந்த கோயம்பேடு சந்தையில் சுமார் 4 ஆயிரம் கடைகள் இயங்கி வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு சுமார் 35 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறும் ஆசியாவின் மிகப்பெரிய சந்தையாகவும் திகழ்கிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் இந்த சந்தையில் கொட்டப்பட்டிருக்கும் அழுகிய பழங்களும், காய்கறிகளும் சுகாதார சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

விற்பனையாகாத பழங்களும், காய்கறிகளும் அழுகிய நிலையில் கோயம்பேடு வளாகத்திற்குள்ளாகவே கொட்டப்படுவதால் அதிகளவு துர்நாற்றம் வீசுவதோடு, அதன் மூலம் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய சந்தையாகக் கருதப்படும் கோயம்பேடு சந்தையில் நிலவும் இந்த சுகாதார சீர்கேடு, அங்கு வரும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் சுகாதாரத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

அழுகிய பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கொட்டுவதற்குத் தனி இடம் ஒதுக்குவதோடு, அவ்வாறு கொட்டப்படும் பழங்களையும், காய்கறிகளையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்ற வியாபாரிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படாமலேயே இருக்கிறது. சுகாதார சீர்கேடுகள் நிறைந்த கோயம்பேடு சந்தைக்கு வருவதற்கே பொதுமக்கள் அச்சப்படும் அளவிற்கான சூழலும் ஏற்பட்டுள்ளது.

நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் கோயம்பேடு சந்தையை முறையாகப் பராமரிக்கத் தவறிவிட்டதாக சிஎம்டிஏ நிர்வாகத்தின் மீது புகார் எழுந்திருக்கிறது. தமிழகத்தில் உருமாறிய கொரோனா தொற்று ஒருபுறம் பரவிக் கொண்டிருக்கும் நிலையில், மறுபுறம் கோயம்பேடு சந்தையில் கொசுக்களால் உருவாகும் டெங்கு, மலேரியா காய்ச்சல் ஏற்படும் அசாதாரண சூழலும் உருவாகியுள்ளது.

எனவே பொதுமக்கள் பாதிக்கப்படுவதற்கு முன்பாகவே உரிய நடவடிக்கை மேற்கொண்டு கழிவுகளை உடனுக்குடன் அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை சிஎம்டிஏ நிர்வாகமும் தமிழக அரசும் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை  எழுந்துள்ளது.

Tags: The height of health deterioration: Koyambedu market that causes diseasesகோயம்பேடு சந்தைசென்னை கோயம்பேடு சந்தை
ShareTweetSendShare
Previous Post

தாம்பரத்தில் பாலியல் அத்துமீறல் நடந்த அரசு விடுதியில் பாதுகாப்பு குறைபாடு : காவல்துறை

Next Post

சிறு, குறு நிறுவனங்கள் வளர்ச்சி : மத்திய அரசின் தொழில்நுட்ப மையங்களுக்கு வரவேற்பு!

Related News

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!

மெரினாவில் குளு குளு பேருந்து நிறுத்தம் – ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை மாநகராட்சி!

Load More

அண்மைச் செய்திகள்

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு

ஆழ்ந்த ஒத்துழைப்பின் மூலமே பன்முகத்தன்மையை உருவாக்க முடியும் – எஸ்.ஜெய்சங்கர்

இன்றைய தங்கம் விலை!

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் படிபூஜை – பக்தர்கள் வழிபாடு!

சிக்கிம் நீா்மின் திட்ட சுரங்கப்பாதையில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

டெல்லி போராட்டம் தொடர்பாக முன்பே சுற்றறிக்கை வெளியிட்ட அமெரிக்க தூதரகம்!

ஆவின் பால் தட்டுப்பாடும் தவெக அரசின் அலட்சியமும் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies