சுகாதார சீர்கேட்டின் உச்சம் : நோய்களை உருவாக்கும் கோயம்பேடு சந்தை!
Sep 9, 2026, 09:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சுகாதார சீர்கேட்டின் உச்சம் : நோய்களை உருவாக்கும் கோயம்பேடு சந்தை!

Murugesan M by Murugesan M
Jun 10, 2025, 07:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை கோயம்பேடு சந்தையில் குவிந்து கிடக்கும் அழுகிய பழங்கள் மற்றும் காய்கறிகளால் சுகாதார சீர்கேடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  நாள்தோறும் லட்சக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் கோயம்பேடு சந்தையில் கொட்டப்படும் கழிவுகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னையின் தனித்துவமான அடையாளங்களில் ஒன்று தான் இந்த கோயம்பேடு காய், கனி மற்றும் மலர் அங்காடி. சென்னை மட்டுமல்ல அதன் புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த சிறு,குறு வணிகர்களின் வியாபாரச் சந்தையாகவும் இந்த கோயம்பேடு சந்தை விளங்கி வருகிறது.

295 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் இந்த கோயம்பேடு சந்தையில் சுமார் 4 ஆயிரம் கடைகள் இயங்கி வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு சுமார் 35 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறும் ஆசியாவின் மிகப்பெரிய சந்தையாகவும் திகழ்கிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் இந்த சந்தையில் கொட்டப்பட்டிருக்கும் அழுகிய பழங்களும், காய்கறிகளும் சுகாதார சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

விற்பனையாகாத பழங்களும், காய்கறிகளும் அழுகிய நிலையில் கோயம்பேடு வளாகத்திற்குள்ளாகவே கொட்டப்படுவதால் அதிகளவு துர்நாற்றம் வீசுவதோடு, அதன் மூலம் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய சந்தையாகக் கருதப்படும் கோயம்பேடு சந்தையில் நிலவும் இந்த சுகாதார சீர்கேடு, அங்கு வரும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் சுகாதாரத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

அழுகிய பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கொட்டுவதற்குத் தனி இடம் ஒதுக்குவதோடு, அவ்வாறு கொட்டப்படும் பழங்களையும், காய்கறிகளையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்ற வியாபாரிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படாமலேயே இருக்கிறது. சுகாதார சீர்கேடுகள் நிறைந்த கோயம்பேடு சந்தைக்கு வருவதற்கே பொதுமக்கள் அச்சப்படும் அளவிற்கான சூழலும் ஏற்பட்டுள்ளது.

நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் கோயம்பேடு சந்தையை முறையாகப் பராமரிக்கத் தவறிவிட்டதாக சிஎம்டிஏ நிர்வாகத்தின் மீது புகார் எழுந்திருக்கிறது. தமிழகத்தில் உருமாறிய கொரோனா தொற்று ஒருபுறம் பரவிக் கொண்டிருக்கும் நிலையில், மறுபுறம் கோயம்பேடு சந்தையில் கொசுக்களால் உருவாகும் டெங்கு, மலேரியா காய்ச்சல் ஏற்படும் அசாதாரண சூழலும் உருவாகியுள்ளது.

எனவே பொதுமக்கள் பாதிக்கப்படுவதற்கு முன்பாகவே உரிய நடவடிக்கை மேற்கொண்டு கழிவுகளை உடனுக்குடன் அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை சிஎம்டிஏ நிர்வாகமும் தமிழக அரசும் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை  எழுந்துள்ளது.

Tags: The height of health deterioration: Koyambedu market that causes diseasesகோயம்பேடு சந்தைசென்னை கோயம்பேடு சந்தை
Share
Tweet
SendShare
Previous Post

தாம்பரத்தில் பாலியல் அத்துமீறல் நடந்த அரசு விடுதியில் பாதுகாப்பு குறைபாடு : காவல்துறை

Next Post

சிறு, குறு நிறுவனங்கள் வளர்ச்சி : மத்திய அரசின் தொழில்நுட்ப மையங்களுக்கு வரவேற்பு!

Related News

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

நிர்வாக வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை – அரசாணை வெளியீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies