சிறு, குறு நிறுவனங்கள் வளர்ச்சி : மத்திய அரசின் தொழில்நுட்ப மையங்களுக்கு வரவேற்பு!
Aug 3, 2025, 04:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சிறு, குறு நிறுவனங்கள் வளர்ச்சி : மத்திய அரசின் தொழில்நுட்ப மையங்களுக்கு வரவேற்பு!

Web Desk by Web Desk
Jun 10, 2025, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை மேலும் அதிகரிக்கும் நோக்கத்தில் மத்திய அரசின் மூலம் அமைக்கப்படும் தொழில்நுட்ப மையங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் சிறு,குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்காக மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் திட்டம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

2024 -25 ஆம் ஆம் நிதியாண்டில் 36 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஆட்டோ மொபைல் மற்றும் டெக்ஸ்டைல், பொறியியல் சார்ந்த உபகரணங்களை ஏற்றுமதி செய்து கோவை மாவட்டம் சாதனை படைத்துள்ளது. உலகளவில் தொழில்துறை நிறுவனங்களுக்கிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போட்டியைச் சமாளிக்க டெக்னிக்கல் சப்போர்ட், டெஸ்டிங், பயிற்சி மற்றும் ஆராய்ச்சி ஆகியவை அவசியமானதாக விளங்குகிறது.

அத்தகைய அவசியம் தான் கோவை மாவட்டம் அரசூரில் மத்திய அரசின் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்நுட்ப மையம் அமைய முக்கிய காரணமாகவும் அமைந்திருக்கிறது.  தொழில் வளர்ச்சியை அதிகரிப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கும் இந்த திட்டத்தின் மூலம் பொது மற்றும் தனியார் நாட்டாண்மையில் உருவாக்குதல், செயல்படுத்துதல், பரிமாறுதல் ஆகியவை மேம்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் தமிழகத்தின் கோவை, பாண்டிச்சேரி உள்ளிட்ட 18 இடங்களில் இந்த தொழில்நுட்ப மையங்கள் அமைக்கப்பட உள்ளன. தொழில்துறையில் கோவைக்கு மிகப்பெரிய வாய்ப்பையும், வளர்ச்சியையும் இந்த தொழில்நுட்ப மையங்கள் ஏற்படுத்திக் கொடுக்கும் என தொழில்துறையினர்  நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தேசத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கை வகிக்கும் சிறு,குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை மையப்படுத்தி மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் எண்ணற்ற திட்டங்களின் வரிசையில் அமைந்திருக்கும் இந்த சிறு,குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொழில்நுட்ப மையங்கள் ஒட்டுமொத்த தொழில்துறையினர் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

Tags: Development of small and micro enterprises: Welcome to the technology centers of the central governmentசிறுகுறு நிறுவனங்கள் வளர்ச்சி
ShareTweetSendShare
Previous Post

சுகாதார சீர்கேட்டின் உச்சம் : நோய்களை உருவாக்கும் கோயம்பேடு சந்தை!

Next Post

ஜம்மு காஷ்மீரை பிற பகுதிகளுடன் இணைக்கும் கனவு நிறைவேறியது : ஃபரூக் அப்துல்லா பெருமிதம்!

Related News

திருமங்கலத்தில் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக கிடந்த சிபிஎஸ்இ மண்டல அலுவலர் – போலீஸ் விசாரணை!

செய்யாறு அருகே சந்தையை இடம் மாற்றம் செய்ய எதிர்ப்பு – வியாபாரிகள் சாலை மறியல்!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை – பெற்றோர் வேதனை!

ஓபிஎஸ் விலகியது குறித்து தலைமை பதிலளிக்கும் – எல்.முருகன்

கிட்னியை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டதே திராவிட மாடல் அரசின் சாதனை – வானதி சீனிவாசன்

பிரதமர் மோடி பெயரை கூறுமாறு அதிகாரிகள் சித்ரவதை செய்தனர் – பிரக்யா சிங் தாக்கூர்

Load More

அண்மைச் செய்திகள்

விபத்தில் சிக்குபவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் அலட்சியம் காட்டுகின்றன – ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு!

தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையம் – விமான சேவை தொடங்கியது!

ஆணவ கொலை நடைபெறுவதற்கு திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் – தமிழிசை

பவானி சாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மாணவர் மாயம் – தேடும் பணி தீவிரம்!

சட்டமன்ற தேர்தலையொட்டி பொங்கல் பரிசு வழங்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன்

ஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரம் – டிரம்ப்பின் கருத்துக்கு இந்தியா மறுப்பு!

ஆடிப்பெருக்கு கோலாகலம் – நீர்நிலைகளில் குவிந்த புதுமணத்தம்பதிகள்!

தீரன் சின்னமலை 220 – வது நினைவு தினம் – அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் மரியாதை!

கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 200 டாலராக உயரலாம், ஏன் தெரியுமா?

ஆடிப்பெருக்கு விழா – பவானி கூடுதுறை ஸ்ரீ சங்கமேஸ்வரர் கோயிலில் நயினார் நாகேந்திரன் வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies