டெல்லி சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 66 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள், டெல்லியில் சட்ட விரோதமாகக் குடியேறி வசித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து வடமேற்கு டெல்லியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சட்ட விரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தினர் 66 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து அவர்களை வங்க சேதத்திற்குத் திருப்பி அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.