கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே பயணிகளை ஏற்றிச் செல்ல முயன்ற தனியார் தொழிற்சாலையின் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தாம்பரம் செல்லும் வழித்தடத்தில் தனியார் தொழிற்சாலையில் பணியாளர்களை அழைத்துச் செல்லும் வேன் ஒன்று நின்றது.
அப்போது போக்குவரத்து காவலரைக் கண்ட தனியார் வாகனம் வேகமாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. இதனை பின் தொடர்ந்து சென்ற காவலர் மதுபோதையிலிருந்த ஓட்டுநரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினார்.
அப்போது, பணம் பெற்றுக்கொண்டு பொதுமக்களை வாகனத்தில் அழைத்துச் சென்றது தெரியவந்தது. பின்னர் அவரை கைது செய்த போலீசார் வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.