உத்தம சோழபுரத்தில் 50 கோடி ரூபாயில் கட்டப்படும் தடுப்பணையை இடமாற்றம் செய்யக்கோரி நாகை ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகூர் அருகே உள்ள உத்தம சோழபுரத்தில் கடல் நீர் உட்புகுவதைத் தடுக்கும் வகையில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தை பூதங்குடி கிராமத்தில் கட்ட வலியுறுத்தி தமிழக காவிரி விவசாயச் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆட்சியர் அலுவலக பிரதான வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பாதுகாப்புப் பணியிலிருந்த காவல்துறைக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.