லாஸ் ஏஞ்சல்ஸில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க கடற்படையினர் 700 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
லாஸ் ஏஞ்சல்ஸில் சட்டவிரோதமாக குடியேறிய 44 பேர் அண்மையில் கைது செய்யப்பட்டனர். இதனால் அங்கு போராட்டம் வெடித்தது.
போராட்டத்தை கட்டுப்படுத்த தேசிய காவல் படை போலீசாரை டிரம்ப் அனுப்பி வைத்தார். இதனால் ஆத்திரமடைந்த கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூஸ்கம் உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.