இந்திய விமானப்படை விங் கமாண்டரான சுபான்ஷு ஷுக்லா உட்பட 4 பேர் இன்று சர்வதேச விண்வெளி மையத்திற்கு புறப்படுகின்றனர்.
மனிதர்களை வின்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை இந்தியா செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்லும் விங் கமாண்டர் சுபான்ஷு ஷுக்லா உட்பட 4 பேரை பிரதமர் மோடி கடந்த ஆண்டு அறிவித்தார்.
அதன்படி அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான ஆக்ஸிம் ஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து, “ஆக்சியம் 4” என்ற திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்துகிறது. இந்த திட்டத்தின் கீழ் இந்தியாவின் சுபான்ஷு ஷுக்லா, அமெரிக்கா, ஹங்கேரி, போலந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் சர்வதேச விண்வெளி மையம் செல்ல திட்டமிடப்பட்டது.
நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து இன்று மாலை 5.30 மணிக்கு, இவர்கள் அனைவரும் பால்கன்-9 ராக்கெட்டில் ஏவப்படும் டிராகன் விண்கலம் மூலம் விண்வெளிக்குச் செல்ல உள்ளதாக இஸ்ரோ தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.