உலக நாடுகளுக்கு அனைத்து கட்சி எம்.பி-க்கள் குழு மேற்கொண்ட பயணத்தை வருங்காலத்தில் ஒரு நடைமுறையாக மாற்ற பிரதமர் மோடியிடம் பரிந்துரைத்துள்ளதாக காங்கிரஸ் கட்சி எம்.பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.
டெல்லி திரும்பிய அனைத்து கட்சி எம்.பி-க்கள் குழு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடினர். இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி சசி தரூர், பிரதமருடனான சந்திப்பு மிகவும் இனிமையானதாக அமைந்ததாக தெரிவித்தார்.
இந்த சந்திப்பை அனைத்து பிரதிநிதிகளின் சேவைக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு வாய்ப்பாக பிரதமர் மோடி கருதியதாக கூறிய அவர், அனைவரும் பிரதமருடன் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டதாக குறிப்பிட்டார்.