இந்தியாவை சேர்ந்த சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேரை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அழைத்து செல்லும் ஆக்சியம்-4 திட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து ‘ஆக்ஸியம் – 4’ என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்ப ஏற்பாடு செய்தது. இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேர் அமெரிக்காவிலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன்-9 ராக்கெட் மூலம் இன்று மாலை 5.30 மணிக்கு சர்வதேச விண்வெளி மையத்திற்கு புறப்பட இருந்தனர்.
இந்நிலையில், ராக்கெட்டில் திரவ ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டதால் திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திட்டம் மீண்டும் எப்போது செயல்படுத்தப்படும் என்பது பின்னர் தெரிவிக்கப்படும் எனவும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. ஏற்கனவே மோசமான வானிலை காரணமாக ‘ஆக்ஸியம் – 4’ திட்டம் ஒத்திவைக்கப்பட்டிருந்து குறிப்பிடத்தக்கது.