திருப்பூரில் இருந்து பொள்ளாச்சி சென்ற அரசு பேருந்தில் மழை நீர் ஒழுகியதால் ஓட்டுநருக்கு நடத்துநர் குடைபிடித்த வீடியோ வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் பேருந்துகளில் மழைநீர் ஒழுகும் அவலநிலை தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், திருப்பூரில் இருந்து பொள்ளாச்சி சென்ற அரசு பேருந்தின் முன்பக்க மேற்கூரையில் மழைநீர் ஒழுகியது. இதனால் பேருந்தை இயக்க ஓட்டுநர் சிரமப்பட்டதால், அவருக்கு உதவியாக நடந்துநர் குடைபிடித்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.