திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொண்ட பக்தர்கள் சொந்த ஊர் செல்ல ரயில் நிலையத்தில் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
வைகாசி மாத பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர்.
கிரிவலம் முடித்து சொந்த ஊர் செல்ல அவர்கள் ரயில் நிலையங்களில் குவிந்தனர். இதனால், அங்குக் கூட்டம் அலைமோதிய நிலையில் ரயில்வே போலீசார் நெரிசலைச் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.