வைகாசி மாத பௌர்ணமியையொட்டி உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தில் உள்ள ராமர் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.
ஜூன் மாதத்தில் வரும் பௌர்ணமியை வடமாநிலத்தவர் ஜேஷ்ட பௌர்ணமி என அழைப்பார்கள். அந்த வகையில், ஜேஷ்ட பௌர்ணமியையொட்டி அயோத்தில் உள்ள ராமர் கோயிலில் அதிகாலை முதல் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
ஜேஷ்ட பௌர்ணமி தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் அயோத்தி கோயிலுக்குப் படையெடுத்து வருகின்றனர்.