வீடுகளை ஒதுக்க லஞ்சம் : திமுகவினருக்கே ஒதுக்கப்படுவதாக கொந்தளிப்பு!
Jun 13, 2025, 03:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வீடுகளை ஒதுக்க லஞ்சம் : திமுகவினருக்கே ஒதுக்கப்படுவதாக கொந்தளிப்பு!

Web Desk by Web Desk
Jun 11, 2025, 08:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மந்தைவெளி அருகே புதுப்பிக்கப்பட்ட நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் குடியிருப்பில் ஏற்கனவே வசித்து வந்தவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படவில்லை என்ற புகார் எழுந்திருக்கிறது. உரிய ஆதாரங்கள் இருந்தும் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வீடுகள் ஒதுக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சென்னை மந்தைவெளி ஆர்.கே.நகர் வன்னியம்பதி குப்பை மேடு பகுதியில் இருந்த நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பு பழுதடைந்த நிலையில் இருப்பதாகக் கூறி கடந்த 2020ம் ஆண்டு இடிக்கப்பட்டது. குடியிருப்பு இடிக்கப்படுவதற்கு முன்பாக அங்குத் தங்கியிருந்த 500க்கும் அதிகமான குடும்பங்களுக்கு அதே இடத்தில் கட்டப்படும் புதிய குடியிருப்புகளில் இடம் ஒதுக்கப்படும் என வாக்குறுதியும் அளிக்கப்பட்டது.

பதினெட்டு மாதங்களில் புதிய குடியிருப்பு கட்டி முடிக்கப் படும் என அறிவித்த நிலையில் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பின்பு அதாவது அண்மையில் தான் அந்த குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கால தாமதமாகக் கட்டி முடிக்கப்பட்ட குடியிருப்பில், ஏற்கனவே தங்கியிருந்த பொதுமக்களுக்கு மீண்டும் வீடுகள் ஒதுக்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

பழைய குடியிருப்புகளை அகற்றிவிட்டு புதிய குடியிருப்புகளைக் கட்டித்தருகிறோம் என வாக்குறுதியளித்த அரசு நிர்வாகம், குடியிருப்புகளைக் கட்டி முடித்த பின்பு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற மறுப்பதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தங்களுக்கு மீண்டும் வீடுகள் ஒதுக்கப்படும் என்ற கனவில் மந்தைவெளி பகுதியிலேயே சுமார் 5 வருடங்களுக்கு வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி வந்த பொதுமக்கள் தற்போது கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

புதிய குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்படுவதற்கு மந்தை வெளிப்பகுதியின் திமுக வட்டச் செயலாளர் தொடங்கி சட்டமன்ற உறுப்பினர்கள் வரை கமிசன் கேட்பதாகவும், கமிசனை கொடுக்க முடியாதவர்களுக்கு வீடுகளை ஒதுக்க முடியாது என அதிகாரப் போக்குடன் பேசுவதாகவும் மக்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்

சிறு வயதிலிருந்து வசித்து வந்த குடியிருப்பில் வசித்து வந்தவர்களுக்கு வீடுகளை ஒதுக்காமல் திமுகவின் ஆதரவாளர்கள் பலருக்கு வீடுகள் ஒதுக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, குடியிருப்பிலிருந்ததற்கான சான்றிதழ் என அனைத்து ஆதாரங்களையும் வழங்கிய பின்பும் வீடுகள் ஒதுக்க மறுப்பதாக அதிகாரிகள் மீது பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பழைய குடியிருப்புகளை இடிக்கும் போது இலவசமாக வீடுகள் கட்டித்தரப்படும் எனத் தெரிவித்துவிட்டு தற்போது 11 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே வீடுகள் ஒதுக்கப்படும் என அதிகாரிகள் கூறுவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் குடியிருப்பில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக வசித்து வந்த மக்கள், குடியிருப்பைப் புதுப்பிக்கிறோம் எனும் பெயரில் வெளியேற்றப்பட்டிருக்கிறார். தங்க வீடுகளின்றியும், யாருடைய ஆதரவின்றியும் தவித்து வரும் மக்களுக்கு ஏற்கனவே அளித்த வாக்குறுதியின்படி முறையான குடியிருப்புகளை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: Bribery to allocate houses: Uproar over allocation to DMK membersவீடுகளை ஒதுக்க லஞ்சம்சென்னை மந்தைவெளிலஞ்சம் கொடுத்தால் மட்டுமே வீடுகள்
ShareTweetSendShare
Previous Post

ஆமைவேகத்தில் தடுப்பணை : வீணாக கடலில் கலக்கும் காவிரி நீரால் விவசாயிகள் வேதனை!

Next Post

தேசிய சட்டப் பல்கலை நுழைவு தேர்வில் வெற்றி : விடா முயற்சியால் சாதித்த மலைக்கிராம மாணவர்!

Related News

I-STAR- வானில் நெற்றிக்கண் : அதிநவீன உளவு விமானத்தை வாங்க இந்தியா முடிவு!

நெல்லை – நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா கோலாகலம்!

NO MISSILE… ONLY WATER BOMB : ஆபரேஷன் சிந்தூர்-2 ஆரம்பம் – மண்டியிடும் பாகிஸ்தான்!

கரூர் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட லாரியை மடக்கி பிடித்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்!

அதிகார வெறியில் யூனுஸ் : தேர்தலை ஒத்தி வைக்க சதி – வெடிக்கும் போராட்டம்!

உயர் நீதிமன்ற மதுரை கிளை வளாகத்தில் பேட்டரி கார் சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்து – மீட்பு பணிகள் தீவிரம்!

சமயபுரம் கோயில் அருகே உறங்கிக்கொண்டு இருந்தவர் கார் மோதியதில் பலி!

அகமதாபாத் விமான விபத்து – உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எல்.முருகன், அண்ணாமலை இரங்கல்!

பொன்முடி மனு மீது வரும் 21ம் தேதி உத்தரவு – சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு!

விமான விபத்து மீட்பு நடவடிக்கையை விரைவுப்படுத்துக – குஜராத் முதல்வரை தொடர்பு கொண்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

அகமதாபாத் விமான விபத்து – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விமான விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் – ஏர் இந்தியா சேர்மன் என்.சந்திரசேகரன்

அகமதாபாத் விமான விபத்து – மீட்பு நடவடிக்கையை விரைவுப்படுத்த பிரதமர் மோடி உத்தரவு!

விமான விபத்து குறித்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன் – குஜராத் முதல்வர்

சேலத்தில் முதல்வரின் வருகையை முன்னிட்டு பயன்படுத்தப்பட்ட தடை செய்யப்பட்ட ஒலிபெருக்கிகள் – பொதுமக்கள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies