ஆமைவேகத்தில் தடுப்பணை : வீணாக கடலில் கலக்கும் காவிரி நீரால் விவசாயிகள் வேதனை!
Jul 26, 2026, 11:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆமைவேகத்தில் தடுப்பணை : வீணாக கடலில் கலக்கும் காவிரி நீரால் விவசாயிகள் வேதனை!

Murugesan M by Murugesan M
Jun 11, 2025, 08:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் விவசாயத்திற்கு பயனின்று வீணாகக் கடலில் கலப்பது டெல்டா பகுதி விவசாயிகள் மத்தியில் பெருத்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. வீணாகக் கடலில் கலக்கும் நீரை முறையாகச் சேமிக்கவும், ஆமை வேகத்தில் தடுப்பணை கட்டும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காவிரி நதிநீர் விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் மதிக்காத கர்நாடக அரசு, அம்மாநிலத்தில் பருவமழை கொட்டித் தீர்க்கும் கால கட்டங்களில் உபரிநீரைத் திறந்து விடுவதையும், தமிழகத்திற்குத் தேவைப்படும் நேரங்களில் உரிய நீரை வழங்க மறுப்பதையுமே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் பாயும் காவிரியை வெள்ள வடிகாலாக மட்டுமே பயன்படுத்தி வரும் கர்நாடகத்தின் செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்கு உள்ளாகி வரும் நிலையில், அவ்வாறு திறக்கப்படும் நீரும் வீணாகக் கடலில் கலப்பது விவசாயிகள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீர் வீணாகக் கடலில் கலக்கும் நிலையில், அதனைத் தடுத்து நிறுத்தும் வகையில் தடுப்பணைகள் கட்டவோ, விவசாயத்திற்குப் பயன்படுத்தவோ எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காத திமுக அரசால் விவசாயிகள் கடும் இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். அதிலும் குறிப்பாக மயிலாடுதுறையில் 516 கோடி ரூபாய் மதிப்பிலான கதவணை மற்றும் தஞ்சை புகளூரில் 406 கோடி ரூபாய் மதிப்பிலான கதவணைக்கான கட்டுமானப் பணிகள் ஆமைவேகத்தில் நடைபெற்று வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

காவிரி – வைகை – குண்டாறு திட்டத்தைச் செயல்படுத்துவோம் என்ற அறிவிப்பு ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையில் தவறாமல் இடம்பெறுகிறதே தவிர அந்த திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் துளியளவும் தொடங்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் விவசாயத்திற்குப் பயனின்றி வீணாகக் கடலில் கலப்பது தொடர்கதையாகி வருவதாகவும் விவசாயிகள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்

ஏற்கனவே, மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களால் பெரும் இழப்பைச் சந்தித்து வரும் நிலையில், உரிய நேரத்தில் கிடைக்க வேண்டிய நீரும் கிடைக்காத காரணத்தினால் பாசன நிலங்களின் பரப்பளவு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே வருகிறது.

டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, இனிவரும் காலங்களில் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரை முறையாகச் சேமித்து விவசாயத்திற்குப் பயன்படுத்துவதோடு, புதிய தடுப்பணைகளைக் கட்டும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என ஒட்டுமொத்த டெல்டா விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: விவசாயிகள் வேதனைTurtle-like check dam: Pain due to Cauvery water flowing into the sea in vainஆமைவேகத்தில் தடுப்பணை
ShareTweetSendShare
Previous Post

சுமார் 6,400 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Next Post

வீடுகளை ஒதுக்க லஞ்சம் : திமுகவினருக்கே ஒதுக்கப்படுவதாக கொந்தளிப்பு!

Related News

ராணுவ நடவடிக்கையா? ராஜதந்திரமா? : போரிலிருந்து வெளியேற அமெரிக்கா வியூகம் – சிறப்பு தொகுப்பு!

இந்து கோயில் சொத்துக்களை பாதுகாப்பதில் அரசு தோல்வி – காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவை கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு விவகாரம் – 8 பேர் சஸ்பெண்ட்!

வெள்ளத்துக்கு இந்தியா காரணமா? : பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என பாரதம் மறுப்பு – சிறப்பு தொகுப்பு!

வேறு வழி? – 3 மாதங்களில் ரூ.20,881 கோடி கடன் வாங்கிய தமிழக அரசு!

தமிழக வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

நந்தன் நீலகேனி தலைமையில் குழு; பிரதமர் மோடி அறிவிப்பு

பாதுகாப்பு துறை உற்பத்தியில் இந்தியா புதிய உயரங்களை எட்டி வருகிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

ராணுவ பாரம்பரிய வளாகமாக விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை போர் நினைவு சின்னம்!

புதிய FLAGSHIP எஸ்யூவி காரான ஹோண்டா ZR-V மாடல்  அறிமுகம்!

13 வது சோதனை ஓட்டம் – விண்ணில் பாய்ந்த உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான ஸ்டார்ஷிப்!

கார்கில் போர் வெற்றி தினம் – சென்னை போர்நினைவுச் சின்னத்தில் லெப்டினன்ட் ஜெனரல் ஶ்ரீஹரி மரியாதை!

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் எதிர்கட்சிகள் – நிமிடத்திற்கு ரூ.2.50 லட்சம் இழப்பு!

கர்நாடகாவுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பேருந்துகள் இயக்க வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை!

‘ விக்சித் பாரத்’ என்ற இலக்கை அடைய தனியார் தொழில் முனைவோரின் பங்கு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு சட்ட திருத்த மசோதா – மக்களவையில் நாளை தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies