வீடுகளை ஒதுக்க லஞ்சம் : திமுகவினருக்கே ஒதுக்கப்படுவதாக கொந்தளிப்பு!
Jul 26, 2026, 11:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வீடுகளை ஒதுக்க லஞ்சம் : திமுகவினருக்கே ஒதுக்கப்படுவதாக கொந்தளிப்பு!

Murugesan M by Murugesan M
Jun 11, 2025, 08:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மந்தைவெளி அருகே புதுப்பிக்கப்பட்ட நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் குடியிருப்பில் ஏற்கனவே வசித்து வந்தவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படவில்லை என்ற புகார் எழுந்திருக்கிறது. உரிய ஆதாரங்கள் இருந்தும் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வீடுகள் ஒதுக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சென்னை மந்தைவெளி ஆர்.கே.நகர் வன்னியம்பதி குப்பை மேடு பகுதியில் இருந்த நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பு பழுதடைந்த நிலையில் இருப்பதாகக் கூறி கடந்த 2020ம் ஆண்டு இடிக்கப்பட்டது. குடியிருப்பு இடிக்கப்படுவதற்கு முன்பாக அங்குத் தங்கியிருந்த 500க்கும் அதிகமான குடும்பங்களுக்கு அதே இடத்தில் கட்டப்படும் புதிய குடியிருப்புகளில் இடம் ஒதுக்கப்படும் என வாக்குறுதியும் அளிக்கப்பட்டது.

பதினெட்டு மாதங்களில் புதிய குடியிருப்பு கட்டி முடிக்கப் படும் என அறிவித்த நிலையில் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பின்பு அதாவது அண்மையில் தான் அந்த குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கால தாமதமாகக் கட்டி முடிக்கப்பட்ட குடியிருப்பில், ஏற்கனவே தங்கியிருந்த பொதுமக்களுக்கு மீண்டும் வீடுகள் ஒதுக்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

பழைய குடியிருப்புகளை அகற்றிவிட்டு புதிய குடியிருப்புகளைக் கட்டித்தருகிறோம் என வாக்குறுதியளித்த அரசு நிர்வாகம், குடியிருப்புகளைக் கட்டி முடித்த பின்பு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற மறுப்பதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தங்களுக்கு மீண்டும் வீடுகள் ஒதுக்கப்படும் என்ற கனவில் மந்தைவெளி பகுதியிலேயே சுமார் 5 வருடங்களுக்கு வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி வந்த பொதுமக்கள் தற்போது கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

புதிய குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்படுவதற்கு மந்தை வெளிப்பகுதியின் திமுக வட்டச் செயலாளர் தொடங்கி சட்டமன்ற உறுப்பினர்கள் வரை கமிசன் கேட்பதாகவும், கமிசனை கொடுக்க முடியாதவர்களுக்கு வீடுகளை ஒதுக்க முடியாது என அதிகாரப் போக்குடன் பேசுவதாகவும் மக்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்

சிறு வயதிலிருந்து வசித்து வந்த குடியிருப்பில் வசித்து வந்தவர்களுக்கு வீடுகளை ஒதுக்காமல் திமுகவின் ஆதரவாளர்கள் பலருக்கு வீடுகள் ஒதுக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, குடியிருப்பிலிருந்ததற்கான சான்றிதழ் என அனைத்து ஆதாரங்களையும் வழங்கிய பின்பும் வீடுகள் ஒதுக்க மறுப்பதாக அதிகாரிகள் மீது பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பழைய குடியிருப்புகளை இடிக்கும் போது இலவசமாக வீடுகள் கட்டித்தரப்படும் எனத் தெரிவித்துவிட்டு தற்போது 11 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே வீடுகள் ஒதுக்கப்படும் என அதிகாரிகள் கூறுவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் குடியிருப்பில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக வசித்து வந்த மக்கள், குடியிருப்பைப் புதுப்பிக்கிறோம் எனும் பெயரில் வெளியேற்றப்பட்டிருக்கிறார். தங்க வீடுகளின்றியும், யாருடைய ஆதரவின்றியும் தவித்து வரும் மக்களுக்கு ஏற்கனவே அளித்த வாக்குறுதியின்படி முறையான குடியிருப்புகளை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: Bribery to allocate houses: Uproar over allocation to DMK membersவீடுகளை ஒதுக்க லஞ்சம்சென்னை மந்தைவெளிலஞ்சம் கொடுத்தால் மட்டுமே வீடுகள்
ShareTweetSendShare
Previous Post

ஆமைவேகத்தில் தடுப்பணை : வீணாக கடலில் கலக்கும் காவிரி நீரால் விவசாயிகள் வேதனை!

Next Post

தேசிய சட்டப் பல்கலை நுழைவு தேர்வில் வெற்றி : விடா முயற்சியால் சாதித்த மலைக்கிராம மாணவர்!

Related News

ராணுவ நடவடிக்கையா? ராஜதந்திரமா? : போரிலிருந்து வெளியேற அமெரிக்கா வியூகம் – சிறப்பு தொகுப்பு!

இந்து கோயில் சொத்துக்களை பாதுகாப்பதில் அரசு தோல்வி – காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவை கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு விவகாரம் – 8 பேர் சஸ்பெண்ட்!

வெள்ளத்துக்கு இந்தியா காரணமா? : பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என பாரதம் மறுப்பு – சிறப்பு தொகுப்பு!

வேறு வழி? – 3 மாதங்களில் ரூ.20,881 கோடி கடன் வாங்கிய தமிழக அரசு!

தமிழக வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

நந்தன் நீலகேனி தலைமையில் குழு; பிரதமர் மோடி அறிவிப்பு

பாதுகாப்பு துறை உற்பத்தியில் இந்தியா புதிய உயரங்களை எட்டி வருகிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

ராணுவ பாரம்பரிய வளாகமாக விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை போர் நினைவு சின்னம்!

புதிய FLAGSHIP எஸ்யூவி காரான ஹோண்டா ZR-V மாடல்  அறிமுகம்!

13 வது சோதனை ஓட்டம் – விண்ணில் பாய்ந்த உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான ஸ்டார்ஷிப்!

கார்கில் போர் வெற்றி தினம் – சென்னை போர்நினைவுச் சின்னத்தில் லெப்டினன்ட் ஜெனரல் ஶ்ரீஹரி மரியாதை!

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் எதிர்கட்சிகள் – நிமிடத்திற்கு ரூ.2.50 லட்சம் இழப்பு!

கர்நாடகாவுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பேருந்துகள் இயக்க வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை!

‘ விக்சித் பாரத்’ என்ற இலக்கை அடைய தனியார் தொழில் முனைவோரின் பங்கு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு சட்ட திருத்த மசோதா – மக்களவையில் நாளை தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies