அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமானம் AI171 விபத்து குறித்து ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தாக மத்திய அமைச்சர் எல்முருகன் தெரிவித்துள்ளார்.
இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் வலிமையும் ஆதரவும் கிடைக்கட்டும் என தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விடுத்துள்ள பதிவில், அகமதாபாத்தில் 242 பயணிகளுடன் லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான செய்தி மிகவும் வேதனையளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
துரதிர்ஷ்டவசமான விபத்தில் இறந்தஅனைத்து விலைமதிப்பற்ற உயிர்களின் ஆத்மா சாந்தியடையட்டும் என்றும் கூறியுள்ளார்.
இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.