பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியில் இந்தியா அனைத்து துறைகளிலும் வளர்ச்சி கண்டுள்ளதாக பாஜக எம்எல்ஏ காந்தி தெரிவித்துள்ளார்.
தென்காசியில் உள்ள யோகா டவர் கூட்டரங்கில் மாவட்ட பாஜக சார்பில் பிரதமர் மோடியின் தலைமையிலான அரசின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக எம்எல்ஏ காந்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், உலக பொருளாதாரத்தில் 10வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக தெரிவித்தார். இந்தியாவை உலகளவில் தரம் உயர்த்த பிரதமர் மோடி பாடுபட்டு வருகிறார் எனவும் தெரிவித்தார். தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.