அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்தை பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தார்.
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து வெடித்த விபத்துக்குள்ளானது.
இந்த விமானத்தில், பயணிகள் மற்றும் விமான குழுவினர் உட்பட 242 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த விமான விபத்து நாட்டையே பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ள நிலையில்,
விமான விபத்து நிகழ்ந்த இடத்தை பிரதமர் மோடி ஆய்வு செய்தார். அவருடன் குஜராத் முதலமைச்ச் பூபேந்தர படேல், மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு உள்ளிட்டோரும் சென்றனர்.
முன்னதாக மருத்துவனைக்கு சென்ற அவர், உயிர் பிழைத்த பயணி மற்றும் சிகிச்சை பெற்று வரும் மருத்துவ மாணவர்களிடம் உடல் நலம் விசாரித்தார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.