AI-ஆல் வேலை காலியாகுமா? அதிக ஊதியம் கிடைக்குமா? : ZOHO ஸ்ரீதர் வேம்பு விளக்கம்!
Aug 3, 2025, 02:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

AI-ஆல் வேலை காலியாகுமா? அதிக ஊதியம் கிடைக்குமா? : ZOHO ஸ்ரீதர் வேம்பு விளக்கம்!

Web Desk by Web Desk
Jun 15, 2025, 09:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

AI வருகையால், வேலை இழப்புகள் ஏற்படும் என்ற அச்சம் மேலோங்கி வரும் நிலையில், ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, மனிதர்களால் மட்டுமே செய்யக் கூடிய வேலைகள் இன்னும் நிறைய உள்ளன என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

புரட்சிகரமான தொழில்நுட்பங்களில் ஒன்றான AI ஆதிக்கம் செலுத்தாத துறைகளே இல்லை என்று சொல்லிவிடலாம். அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் AI, வாழ்க்கையை எளிதாகவும் திறமையாகவும் பயன்படுத்த உதவியுள்ளது.

1955 ஆம் ஆண்டு ஜான் மெக்கார்த்தி என்பவரால் செயற்கை நுண்ணறிவு என்ற சொல் உருவாக்கப்பட்டது. முன்னதாக,1950 களில், ஆலன் டூரிங் போன்ற கணினி விஞ்ஞானிகள் இயந்திர கற்றல் மற்றும் அறிவார்ந்த அமைப்புகள் குறித்த தங்கள் ஆராய்ச்சிகள் மூலம் நவீன AI க்கு அடித்தளமிட்டனர்.

இன்று, AI மிக முக்கியமான தொழில்நுட்பமாக உருவாகியுள்ளது. ஸ்மார்ட்போன்கள் முதல் ஸ்மார்ட் வீடுகள் வரை,எங்குப் பார்த்தாலும் AI, வாழும், வேலை செய்யும் மற்றும் தொடர்பு கொள்ளும் விதத்தைப் புதுமையாக மாற்றி வருகிறது.

AI என்பது மனிதர்களைப் போலச் சிந்திக்கவும், கற்றுக்கொள்ளவும், செயல்படவும் திட்டமிடப்பட்ட மனித நுண்ணறிவின் உருவகமாகும். இதன் மூலம், சிக்கல் தீர்க்கும் திறன், முடிவெடுக்கும் திறன் மற்றும் படைப்பாற்றல் போன்ற மனித நுண்ணறிவு தேவைப்படும் அனைத்து பணிகளையும் AI யால் செய்ய முடியும்.

எங்குப் பார்த்தாலும் AI- இதற்குக் காரணம் மனிதர்கள் செய்யும் வேலைகளை அதே திறமையுடன் AI செய்வது தான். அண்மையில் நடத்தப்பட்ட பல ஆய்வுகளின் முடிவுகள், GEN Z ஊழியர்களின் வேலைகளைச்  செயற்கை நுண்ணறிவு  பறித்துவிடும் என்று தெரிவித்துள்ளன.

AI பெரும்பாலான வகையான வேலைகளைப் பறித்துக்கொள்ளும் நிலையில் சமூகத்தில் எந்த மாதிரியான மாற்றங்கள் உருவாகும் ?   இந்த சூழ்நிலையைச் சரியாக எடைபோட்டு, உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஜோஹோவின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, இது குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

AI பற்றி யோசிக்கும் போது, வேலைவாய்ப்பு பற்றி மட்டும் பார்க்காமல்,பொருளாதாரம் சார்ந்த பிரச்சனையாகப் பார்க்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஸ்ரீதர் வேம்பு, தொழிற்சாலை ஒன்றில், தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தாமல்  AI மூலம் அதிகமாக உற்பத்தியாகி சந்தைக்கு வரும் அனைத்து பொருட்களையும் எவ்வாறு  மக்கள் வாங்க முடியும்? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

AI மற்றும் ரோபோகளால் தயாரிக்கப் பட்ட பொருட்களின் விலை பெருமளவில் குறையும் என்றும், சொல்லப்போனால் விலையில்லாமல் கொடுக்க வேண்டிய சூழல் உருவாகும் என்றும் ஸ்ரீதர் வேம்பு எச்சரித்துள்ளார். மேலும், AI யால் ஒருபோதும் செய்ய முடியாத மற்ற எல்லா வேலைகளுக்கும் அதிகமான சம்பளம் கிடைக்கும் நிலை ஏற்படும் என்றும் கூறியுள்ளார்.

குறிப்பாக, குழந்தைகளைப் பராமரித்தல், வீட்டில் சமைத்த உணவுகள், நோயாளிகளைக் கவனித்தல், விவசாயம் செய்தல், கால்நடைகளை வளர்த்தல் ஆகிய பணிகளுக்கு அதிகமான சம்பளம் கிடைக்கும் என்று விளக்கியுள்ளார்.

எனவே, AI சில வேலைகளைப் பறித்துக் கொண்டாலும், மனித உழைப்புக்கு அதிக ஊதியம் கிடைக்கும் என்பதால், வாழ்க்கையைத் தக்கவைக்கக் கொள்ள இது போதுமானதாக இருக்கும் என்று ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு குறிப்பிட்டுள்ளார்.

அடிப்படையில் இது முற்றிலும் தொழில்நுட்ப பிரச்சினை அல்ல.  பொருளாதார விநியோகப் பிரச்சினையால் ஏற்படக் கூடிய அரசியல் பொருளாதாரத்தின் பிரச்சினை ஆகும்.  AI யால் உருவாக்கப்படும் பொருட்களின் விலைகள் ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் இருப்பதை உறுதி செய்வதும், தொழில்துறையின் ஏகபோகங்களை ஒடுக்குவதும்  அரசின் முக்கிய கடமையாகும் என்றும் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

Tags: AI-ஆல் வேலை காலியாகுமாவேலை இழப்புகள்tamil janam tvWill AI make jobs vacant? Will it get higher wages? : ZOHO Sridhar Neembu explainsZOHO ஸ்ரீதர் வேம்பு விளக்கம்
ShareTweetSendShare
Previous Post

நவீன உபகரணங்களின் அணிவகுப்பு : மாற்றுத்திறனாளிகள் வியந்த கண்காட்சி!

Next Post

இஸ்ரேல் தாக்குதலில் பலத்த சேதமடைந்த எண்ணெய் கிடங்கு : உற்பத்தியை நிறுத்துவதாக ஈரான் அறிவிப்பு!

Related News

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 2 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்?

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடர் தாக்குதல் : இரவில் எச்சரிக்கையாக இருக்க துாதரகம் அறிவுறுத்தல்!

“நிசார்’ வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சென்னை ஐஐடி பேராசிரியர்!

விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் – கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார் – பிரதமர் மோடி

தொழிலாளர்கள் நலனில் : அக்கறை மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாய பெருமக்கள் தான் : அண்ணாமலை

நீர்வளம் காப்போம், தலைமுறையை மீட்போம் : நயினார் நாகேந்திரன்

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லியின் மகன் மறுப்பு!

உள்நாட்டில் உற்பத்தியான பொருட்களை உபயோகிக்க வேண்டும் : வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு!

குளியலறையில் வழுக்கி விழுந்த ஜார்கண்ட் அமைச்சர் – மூளையில் இரத்த உறைவு!

இஸ்லாமாபாத் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து – 48 பேர் காயம்!

மக்காவ் ஓபன் பேட்மிண்டன் – லக்சயா சென், தருண் மன்னேபள்ளி தோல்வி!

தேஜஸ்வி யாதவ்-ன் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies