பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தில், தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட 6 ஆயிரத்து 600 வீடுகளை குறைக்கவும் 3 ஆயிரத்து 324 வீடுகள் கட்டுவதை ரத்து செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசின் உயர்நிலைக் குழு இந்த ஒப்புதலை வழங்கியுள்ளது.
பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தின் இரண்டாம் கட்டம் சமீபத்தில் தொடங்கிய நிலையில், மாநில வாரியாக இத்திட்டத்தின் செயல்பாடு குறித்த மத்திய அரசு சார்பில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.
அந்த கூட்டத்தில் 6 ஆயிரத்து 600 வீடுகளைக் குறைக்கவும், 3 ஆயிரத்து 324 வீடுகள் கட்டுவதைக் கைவிடவும் தமிழக அரசு சார்பில் பரிந்துரைக்கப்பட்டது.
தமிழக அரசின் பரிந்துரைகளுக்கு, மத்திய அரசின் உயர்நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளதால், தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய வீடுகள் எண்ணிக்கை குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் மக்கள் விரும்பாததும், நிலம் சரியான முறையில் அமையவில்லை என்பதும், இதற்குக் காரணமாகக் கூறப்பட்டுள்ளது.