கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியில் பாகிஸ்தான் அரசு பாதுகாப்பு பட்ஜெட்டை 20 சதவீதம் அதிகரித்துள்ளதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்தியாவுடனான எல்லை பதற்றம் மற்றும் நாட்டின் கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியில், பாகிஸ்தான் அரசு 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ராணுவ செலவினங்களுக்கு 2.55 லட்சம் கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.
இந்நிலையில், இது நாட்டின் பலவீனமான பொருளாதாரத்தை மேலும் பாதிக்கும் எனவும், முக்கிய சிவில் துறைகளுக்கு நிதி கிடைக்காத நிலை உருவாகும் என்றும் எதிர்க்கட்சிகள் கவலை தெரிவித்துள்ளனர்.