பிரான்ஸ் நாட்டில் சிறார்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படும் என அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார்.
15 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த விரைவில் கடுமையான விதிகள் அமல்படுத்தப்படும் என பிரான்ஸ் நாட்டு அதிபர் மேக்ரான் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் கூட்டு முடிவை எடுக்குமா என்பதை அறிய சில மாதங்கள் காத்திருப்போம் எனக் கூறியுள்ள அவர், ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து பதில் வராவிட்டால் பிரான்ஸ் அரசே தடையை அமல்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.