கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த ஊழியர்களை காவல்துறை கைது செய்தனர்.
திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்ததை போல் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஒப்பந்த ஊழியர்களுக்கு ஒப்பந்தப்படி ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை ஆதரவளித்த நிலையில், போராட்டம் பெரிதாக மாற ஆரம்பித்தது. இந்நிலையில், போராட்டத்தை முடக்கும் வகையில், காவல்துறையினர் குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர்களைக் கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.