சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பச்சாயி அம்மன் கோயிலில் திருவிழாவை முன்னிட்டு சுவாமி ஊர்வலம் நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற இக்கோயிலில் வைகாசித் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற சுவாமிகள் ரத ஊர்வலத்தில், பச்சாயி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் தேரில் வலம் வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தனர்.
இதைத்தொடர்ந்து பூஜை கூடை ஏந்தி வந்த பக்தர்கள், மேள தாளங்கள் முழங்க நடனமாடியும், ஆடுகள் பலியிட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.