அதி கனமழை எச்சரிக்கையின் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இன்று அதிகனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மழையின் போது எவ்வித அசம்பாவிதங்களும், பொருட்சேதமும் ஏற்படாத வகையில் அதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து முதன்மை கல்வி அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர், மீட்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர். மேலும், பில்லூர் அணையில் நீர் தேக்க பகுதியில் நடைபெறும் சூழல் சுற்றுலா இரண்டு நாட்கள் ரத்து செய்வதாக வனத்துறை அறிவித்துள்ளது.