தமிழக அரசின் நிர்வாகம் நிலை குலைந்து இருப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
சென்னை ராமாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,தமிழகத்தில் நடைபெறும் அனைத்து கட்டுமான பணிகளும் பாதுகாப்புக்கு உட்பட்டு நடைபெறுகிறதா, பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து மாநில அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மக்கள் பாதுகாப்பு மீது தமிழக அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை என்றும், நிலை குலைந்தது பாலம் மட்டுமல்ல மாநில அரசின் நிர்வாகமும்தான் என்றும் அவர் சாடினார். தமிழகத்தில் உள்ள பல அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் செய்தது, கீழடியை உலக அளவிற்கு எடுத்து சென்றது பாஜக அரசுதான் என்றும் தமிழிசை குறிப்பிட்டார்.