அனைவரும் ரத்த தானம் செய்வோம் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், ரத்த தானம் செய்வதன் அவசியம் மற்றும் பலன்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வருடந்தோறும் ஜூன் 14-ஆம் தேதி இன்று உலக ரத்ததான தினம் கடைபிடிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இந்நன்னாளில் அனைவரும் ரத்த தானம் செய்வோம் என உறுதியேற்போம் என்றும், பல உயிர்களை காப்பாற்றும் உன்னத தானமான ரத்ததானம் செய்து, நாமும் நலம் பெற்று, பிறர் நலமும் காப்போம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.