திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கட்டப்பட்ட தடுப்புச் சுவர்கள் மூன்றே ஆண்டுகளில் மழையில் கரைந்தன.
பரமனந்தல் பகுதியில் இருந்து ஜமுனாமத்தூர் மலைக்குச் செல்லும் பாதையில் வனத்துறை சார்பில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்புச் சுவர்கள் கட்டப்பட்டுள்ளன.
ஆனால் கட்டப்பட்ட மூன்று ஆண்டுகளிலேயே அவை மழையில் கரைந்தன. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.