முன்னறிவிப்பு இல்லாமல் தேனி பழைய பேருந்து நிலையம் மூடப்பட்டதால் பயணிகள் கடும் சிரமமடைந்தனர்.
தேனி பழைய பேருந்து நிலையத்திற்குள் ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், பேருந்து நிலையத்திற்குள் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாகக் கடந்த மூன்று மாதங்களாக ஒரு வழிப் பாதையாகப் பழைய பேருந்து நிலையம் மாற்றப்பட்டுச் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது முன்னறிவிப்பின்றி மூடப்பட்டது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.