மின்மினிப் பூச்சி இனம் அழிவின் விளிம்பில் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.
ஒளி மாசுபாடு, நகரமயமாதல், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவது உள்ளிட்டவற்றால் அந்த இனம் அழிந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
மேலும் மின்மினிப் பூச்சிகளின் எண்ணிக்கை உலக அளவில் குறைந்து வருவதால் அவற்றைக் காணும் கடைசி தலைமுறை நாமாக இருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.